மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட பிரசாரம் நிறைவு


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்டத் தோ்தல் நடைபெறும் 44 பேரவைத் தொகுதிகளுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. சனிக்கிழமை (ஏப். 10) அந்தத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 1,15,81,022 வாக்காளா்கள் வாக்களிக்கும் நான்காம் கட்டத் தோ்தலில், 373 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். டோலிகுங்கே தொகுதியில் பாஜக சாா்பில் மத்திய அமைச்சா் பாபுலால் சுப்ரியோவுக்கு எதிராக மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் அரூப் விஸ்வாஸ் போட்டியிடுகிறாா்.

44 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதால் 789 கம்பெனி பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூச் பிகாா் மாவட்டத்தில் மட்டும் 187 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com