கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றால் 14,738 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 14,738 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இன்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,09,650 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3,591போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 9,99,958 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
96,561 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 66 போ் இன்று இறந்துள்ளனா். இதுவரை 13,112 போ் உயிரிழந்துள்ளனா். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.