ராஜஸ்தானில் பிகானேர் மாவட்டத்தில் உள்ள நோகா சிறையில் 5 சிறைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க பிகானேரில் இருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தகவல்களின்படி, நோகா சிறையில் செவ்வாய்க்கிழமை
அதிகாலை 2.30 மணியளவில் சிறைச்சாலையின் ஜன்னலை உடைத்து, போர்வையைப் பயன்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்களில் நான்கு கைதிகள் ஹனுமன்கர் மற்றும் ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அருகில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாலோடி சிறையிலிருந்து ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 16 கைதிகள் சிறை ஊழியர்களின் ஒப்புதலுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.