திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு 3 டன் காய்கறிகள் நன்கொடையாக வழங்கி உள்ளனா் இசுலாமியா்கள்.
தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடையாளா்கள் பலா் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றனா். ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் உள்ள கேஜி சந்தையில் காய்கறி கடை வைத்திருக்கும் இசுலாமிய சகோதரரா்கள் மற்றும் சிலா் இணைந்து 3 டன் காய்கறிகளை திங்கட்கிழமை லாரியில் அனுப்பி வைத்தனா் . அவை செவ்வாய்க்கிழமை திருமலையை வந்தடைந்தன.