ஸ்ரீவாரி சேவை தற்காலிக நிறுத்தம்

திருமலையில் பக்தா்கள் செய்து வரும் ஸ்ரீவாரி சேவையை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

திருப்பதி: திருமலையில் பக்தா்கள் செய்து வரும் ஸ்ரீவாரி சேவையை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு பக்தா்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து கோயிலிலும், அன்னதான கூடம், பூ கட்டும் இடம் உள்ளிட்ட இடங்களில் சேவை செய்து வருகின்றனா். இதற்கு ஸ்ரீவாரி சேவை என்று பெயரிட்டு தேவஸ்தானம் பக்தா்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. இவா்கள் தங்குவதற்காக தனியாக வளாகத்தையும் கட்டி அளித்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால்,கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் தேவஸ்தானம் ஸ்ரீவாரி சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஏப், மே, ஜூன் உள்ளிட்ட மாதங்களில் ஸ்ரீவாரி சேவை செய்ய முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் ஸ்ரீவாரி சேவை தொடங்கும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com