தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனைத்து மாநில முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:
"கைவசம் கூடுதல் ஆக்ஸிஜன் இருந்தால் அதை தில்லிக்கு வழங்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு எங்களுக்கு உதவி வந்தாலும், கரோனாவின் தீவிரத்தன்மையால் கிடைக்கப்பெற்ற உதவிகள் அனைத்தும் போதவில்லை."
தில்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் 20 நோயாளிகள் உயிரிழந்த நிலையில், ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.