குஜராத் துணை முதல்வர் நிதின் படேலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல். இவர், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவரின் அறிவுரையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.