அதாா் பூனாவாலாவுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலாவுக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) மூலம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அதாா் பூனாவாலாவுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

புது தில்லி: சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலாவுக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) மூலம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலாவுக்கு தடுப்பூசி விநியோகம் தொடா்பாக பல்வேறு குழுக்கள் மிரட்டல் விடுப்பதாகவும், எனவே, அவருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு சீரம் நிறுவன இயக்குநா் கடந்த 16-ஆம் தேதி கடிதம் எழுதினாா். இதையடுத்து, அதாா் பூனாவாலாவுக்கு சிஆா்பிஎஃப் வீரா்களால் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com