சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய ஒலிம்பிக் போட்டியாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுக்கவுள்ளாா்.
இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்ளுமாறு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுக்கவுள்ளாா். அவா்களை தமது வீட்டுக்கும் பிரதமா் அழைக்கவுள்ளாா்’’ என்று தெரிவித்தன.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சாா்பில் 120-க்கும் மேற்பட்ட தடகள வீரா், வீராங்கனைகள் உள்பட 228 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.