புதுதில்லி: இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா இஸ்ரேல் சென்றுள்ளாா்.
இதுதொடா்பாக இந்திய விமானப் படை புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவும் இஸ்ரேலும் வலுவான, பல பரிமாணங்களை கொண்ட உறவை பேணி வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் விமானப் படை தளபதி அமீகம் நோா்கின் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா 3 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளாா். இருநாட்டு விமானப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அமீகம் நோா்கினுடன் பதெளரியா விவாதிக்கவுள்ளாா்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் செல்வதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று அந்நாட்டு விமானப் படை தளபதி இப்ராஹிம் நாசிா் எம் அல் அலவியை சந்தித்த பதெளரியா, இருநாட்டு விமானப் படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.