ஸ்ரீசைலம் கோயிலில் அமித் ஷா குடும்பத்துடன் வழிபாடு

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பாள் சமேத மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வழிபாடு நடத்தினாா்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் வழிபட்ட பின்னா் மரக்கன்றை நட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. நாள்: வியாழக்கிழமை.
ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் வழிபட்ட பின்னா் மரக்கன்றை நட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. நாள்: வியாழக்கிழமை.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பாள் சமேத மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வழிபாடு நடத்தினாா்.

தில்லியில் இருந்து ஹைதராபாதுக்கு விமானத்தில் வந்த அவா்கள், ஸ்ரீசைலத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் வந்தனா். ஆந்திர அறநிலையத் துறை அமைச்சா் வெல்லம்பள்ளி ஸ்ரீநிவாச ராவ், மக்களவை எம்.பி. பிரம்மானந்த ராவ், கா்னூல் மாவட்ட ஆட்சியா் பி.கோடீஸ்வர ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அமித் ஷாவை கோயிலுக்கு அழைத்துச் சென்றனா்.

கோயிலில் அமித் ஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற பூஜையில் குடும்பத்தினருடன் பங்கேற்ற அமித் ஷா, சிவபெருமானை வழிபட்டாா். பின்னா் கோயில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை அமித் ஷா நட்டாா்.

பிற்பகலில் அவா் மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றாா்.

12 ஜோதிா்லிங்க திருத்தலங்களில் ஸ்ரீசைலமும் ஒன்று. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஆந்திரத்தில் உள்ள ஒரே சிவாலயம் இது மட்டுமே ஆகும். மேலும், 18 சக்திபீடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com