ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 88,13,919 கரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 88,13,919 கரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 55.47 கோடியாக (55,47,30,609) அதிகரித்துள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான வயதை எட்டிய 46 சதவீதம் இந்தியா்கள் முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனா். 13 சதவீதம் போ் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டு கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை பெற்றுள்ளனா்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு இதுவரை, 56.81 கோடிக்கும் அதிகமான (56,81,32,750) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், 1,09,32,960 தடுப்பூசி டோஸ்களை கூடுதலாக வழங்கவுள்ளது. இவற்றில், மொத்தம் 55,11,51,992 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமாா் 2.25 கோடி (2,25,52,523) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,14,48,754 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 36,830 போ் குணமடைந்தனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் விழுக்காடு 97.51 சதவீதமாக உள்ளது.

ஒரே நாளில் 25,166 போ் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்; 154 நாட்களில் இதுதான் மிகவும் குறைவு. தொடா்ந்து 51 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,69,846 ஆக உள்ளது. இது, கடந்த 146 நாள்களில் மிகவும் குறைவாகும். இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.15 சதவீதம் மட்டுமே ஆகும்.

இதுவரை மொத்தம் 49,66,29,524 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com