புதிய காஷ்மீரில் உண்மையைப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்: முஃப்தி

புதிய காஷ்மீரில் உண்மையைப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி விமரிசித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதிய காஷ்மீரில் உண்மையைப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி விமரிசித்துள்ளார்.

பணமோசடி வழக்கில் முஃப்தியின் தாயார் குல்ஷான் நஸீமிடம் அமலாக்கத் துறை புதன்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் அவர் இவ்வாறு விமரிசித்துள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மெஹபூபா முஃப்தியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு இரண்டு நாட்குறிப்புகளைப் பறிமுதல் செய்தது. 

அந்த நாட்குறிப்புகளில் முதல்வராக மெஹபூபா முஃப்தி பதவி வகித்தபோது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு முதல்வர் நிதியிலிருந்து முறைகேடாக பணம் அனுப்பப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் குல்ஷான் நஸீரின் வங்கிக் கணக்குகளுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு குல்ஷான் நஸீருக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில் ஸ்ரீநகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் குல்ஷான் நசீர் புதன்கிழமை ஆஜரானார். 

அவரிடம் சுமார் 3 மணி நேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். 

இதன்பிறகு முஃப்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

"புதிய காஷ்மீரில் யார் உண்மையைப் பேசினாலும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். யார் உண்மையைப் பேசுகிறார்களோ, பிரிவினைவாத கொள்கைக்கு எதிராகப் பேசுகிறார்களோ, ஜம்மு-காஷ்மீர் குறித்து அவர்கள் கட்டமைத்துள்ள பொய் பிம்பத்துக்கு எதிராக பேசுகிறார்களோ அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். 

தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தைச் சந்திக்க நான் மறுப்பு தெரிவித்த மறுநாள் எனது தாயாருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி அமைதிவழியில் போராட்டம் நடத்தியதற்கு மறுநாள் எனது தாயாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது."

இந்திய அரசின் பிரிவினைவாத திட்டத்துக்கும் கொள்கைக்கும் எதிர் நிலைப்பாடு எடுப்பவர்களுக்கு தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை மூலம் சம்மன் அனுப்பப்படுவது புதிய இந்தியாவின் சடங்காகிவிட்டது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com