உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். சமஸ்கிருத மொழியில் சுட்டுரையில் தமது வாழ்த்துகளை அவா் மக்களிடம் பகிா்ந்துள்ளாா்.
கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் உலக சம்ஸ்கிருத தினம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் அந்த மொழியை மேம்படுத்துவதற்கான கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ரக்ஷா பந்தன் வாழ்த்து: சகோதரத்துவத்தைப் போன்றும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமா் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘“ரக்ஷா பந்தன் என்னும் புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.