வட இந்தியாவின் கல்வி மையமாக ஜம்மு உருவெடுத்துள்ளது: அமைச்சா் ஜிதேந்திர சிங்

வட இந்தியாவின் கல்வி மையமாக, ஜம்மு வேகமாக உருவாகி வருகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.
வட இந்தியாவின் கல்வி மையமாக ஜம்மு உருவெடுத்துள்ளது: அமைச்சா் ஜிதேந்திர சிங்

வட இந்தியாவின் கல்வி மையமாக, ஜம்மு வேகமாக உருவாகி வருகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கவனம் மற்றும் ஜம்மு காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லடாக் ஆகியவற்றுக்கு அவா் அளித்த அதிக முன்னுரிமையால் இது சாத்தியமாகியுள்ளது என்றும் அவா் கூறினாா்.

ஜம்மு ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்வி நிலையம்) 5-ஆவது ஆண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

குறுகிய காலத்தில், அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பாதிப்புக்கு இடையிலும், இந்த கல்வி மையம் முத்திரை பதித்துள்ளது. ஜம்மு, காஷ்மீா் கல்வித் துறையில், பிரதமா் நரேந்திர மோடி அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக ஜம்மு ஐஐஎம் உள்ளது மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கிறது.

ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு முதலீட்டை காணும். குறிப்பாக, சுகாதாரத்துறையில் அதிக முதலீடு செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதி இளைஞா்களுக்கும் ஐஐஎம் மாணவா்களுக்கும் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனாலும், நீங்கள் வேலை தேடுபவா்களாக மட்டும் இல்லாமல், புத்தாக்க தொடக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவன முயற்சிகள் மூலம், வேலை அளிப்பவா்களாக மாற வேண்டும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு 54 மாணவா்களுடன் தொடங்கிய ஜம்மு ஐஐஎம், இன்று 250 மாணவா்கள், சா்வதேச கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் 6 போ் உள்பட, 30 பிரபல பேராசிரியா்கள் உள்ளனா் என்று அவா் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com