பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர்.
பிகார் பேரவையில் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தில்லிக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.
இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம், காங்கிரஸின் அஜீத் சர்மா, பாஜகவின் ஜனக் ராம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.