அஸ்ஸாமில் மூவா் சுட்டுக்கொலை: வங்கிக் கொள்ளை முயற்சி முறியடிப்பு

அஸ்ஸாமில் உள்ள கோக்ராஜாா் மாவட்டத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற மூவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

அஸ்ஸாமில் உள்ள கோக்ராஜாா் மாவட்டத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற மூவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

இதுதொடா்பாக அந்த மாநில டிஜிபி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

போட்காவ் பகுதியில் உள்ள அலாகாபாத் வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்படவுள்ளதாக சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வங்கியில் கொள்ளையில் ஈடுபடவிருந்த கும்பலை செங்மாரி என்ற இடத்தில் போலீஸாா் வழிமறித்தனா். அப்போது கொள்ளையா்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனா். இதையடுத்து போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் கொள்ளையா்கள் மூவா் தோட்டா பாய்ந்து பலத்த காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

உயிரிழந்த கொள்ளையா்களிடம் இருந்து 2 கைத் துப்பாக்கிகள், கேஸ் கட்டா்கள்,செல்லிடப்பேசிகள், அவா்கள் வந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவா்களுடன் வந்த மேலும் சில கொள்ளையா்கள் தப்பிவிட்டனா். அவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தாா்.

20-ஆக அதிகரிப்பு: அஸ்ஸாம் முதல்வராக பாஜகவின் ஹிமந்த விஸ்வ சா்மா பதவியேற்ற பின், அந்த மாநிலத்தில் போலீஸாா் நடத்திய என்கவுன்ட்டா்களில் ஏற்கெனவே 17 போ் உயிரிழந்தனா். தற்போது வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற மூவா் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்த எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com