கிருஷ்ணா: ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டம் மடினேபள்ளி மண்டல் பகுதியில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ்விரு பள்ளிகளுக்கும் இரண்டு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்கள் யாருக்கேனும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.