மேகாலயாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 14 ஆண்டு விசாரணைக்குப் பின், அம்மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருபவர் ஜூலியஸ் டார்பாங். இவர் மீது கடந்த 2007ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார்.
இதையும் படிக்க | இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்
புகரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜூலியஸ் டார்பாங்கை கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தநிலையில் தற்போது அதன் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எப்.எஸ்.சங்மா ஜூலியஸ் டார்பாங்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டு கால சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
முன்னதாக பலாத்கார வழக்கு நடந்த போதே சட்டசபை தேர்தலில் ஜூலியஸ் டார்பாங் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.