பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று அவருடைய சிலைக்கு பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சட்ட மேதை அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று நாடு முழுவதும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிற நிலையில் அவரை நினைவு கூறும்பொருட்டு பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்களுக்குப் பின் சபாநாயகர் ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கரின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்