விவசாயிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பான தனது தவறை உணா்ந்து பிரதமா் மோடி மன்னிப்புக் கோரியுள்ளாா். ஆனால் அந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் விவரம் தன்னிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. அந்தப் பட்டியல் என்னிடம் உள்ளது. அதனை அவையில் சமா்ப்பிக்கிறேன்.
போராட்டத்தின்போது சுமாா் 700 விவசாயிகள் உயிரிழந்தனா். அவா்களில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு பஞ்சாப் அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. 152 விவசாயிகளின் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சாா்பிலும் இழப்பீடு மற்றும் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதையே நான் விரும்புகிறேன் என்றாா் அவா்.