கரோனா பெருந்தொற்று காரணமாக இணையம் வழியாக நடத்தப்பட்டுவந்த கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை இனிமேல் நேரடியாக நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். இனி, தமிழ்நாட்டில் இணைய வழி தேர்வுகள் நடத்தப்படாது என அறிவிப்பு வெளியான நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.