இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது: யுஜிசி

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனிமேல் செமஸ்டர் தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பெருந்தொற்று காரணமாக இணையம் வழியாக நடத்தப்பட்டுவந்த கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை இனிமேல் நேரடியாக நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். இனி, தமிழ்நாட்டில் இணைய வழி தேர்வுகள் நடத்தப்படாது என அறிவிப்பு வெளியான நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com