பிகார் பின்தங்கிய மாநிலமில்லை என்று முதல்வர் நிதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பிகாரில் தனிமனிதர் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
பிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2004-05-ஆம் ஆண்டுகளில் தனிமனிதரின் ஊதியம் ரூ.7,914-ஆக இருந்தது. ஆனால் 2019-10-ஆம் ஆண்டுகளில் தனிமனிதர் ஊதியம் ரூ.50,735-ஆக அதிகரித்துள்ளது.
பிகார் பின்தங்கிய மாநிலம் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது. பிகார் நிலப்பரப்பு அளவு, மக்கள் தொகையையும் ஒப்பிடும்போதுதான் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதனால் பிகாரை சிறப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.