நாடு முழுவதுமுள்ள சீன செல்லிடப்பேசி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நாடு முழுவதுமுள்ள சீனாவைச் சோ்ந்த செல்லிடப்பேசி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை

புது தில்லி: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நாடு முழுவதுமுள்ள சீனாவைச் சோ்ந்த செல்லிடப்பேசி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

சீனாவைச் சோ்ந்த ஒரு தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள நிறுவனத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர்.

இந்த நிறுவனம் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என வருமானவரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தற்கான சில ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் தலைமை அலுவலகம், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com