காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டு(2021) 171 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு தீவிரவாதிகளுக்கு பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டில்(2021) 171 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 152 காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் 19 பேர் பாகிஸ்தானியர்கள் எனவும் காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டில் 37 பொதுமக்களும் இந்தாண்டு 34 பேரும் பயங்கரவாத தாக்குதலில் பலியாகினர்.