இந்தியாவில் ஒரேநாளில் 11,427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை 8 மணி வரை, புதிதாக 11,427 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,57,610-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 11,858 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,34,983-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 118 போ் உயிரிழந்தனா்.
இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,392-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,68,235 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.70 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், நேற்று மட்டும் 5,04,263 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.