மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு விரோதமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமரிசித்துள்ளார்.
2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தது:
"இது மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை. பொய்யான கருத்துகளையே எப்போதும் வெளியிடுவர். நாட்டின் காகிதமில்லா முதல் நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளையும் விற்றுவிட்டது. அமைப்பு சாரா துறைக்கென நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இடம்பெறவில்லை."
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்..