மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3,289 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 27 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,28,347 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19,32,294 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 51,109 பேர் பலியாகியுள்ளனர். 43,701 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 95.26 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.52 சதவிகிதமாக உள்ளது.