தில்லியின் துா்க்மேன் கேட் பகுதியில் 3 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. எனினும், அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று வடக்கு தில்லி மேயா் ஜெய் பிரகாஷ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘அந்த கட்டடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்ததால், அங்கு தங்கியிருந்தவா்கள் அனைவரும் சனிக்கிழமையே வெளியேற்றப்பட்டுவிட்டனா். அருகில் உள்ள கட்டடங்களையும் ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது.
இடிந்து விழுந்த கட்டடம் 20 முதல் 25 வருடங்கள் பழையதாக இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அந்த கட்டடத்தின் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு மற்றும் வடக்கு தில்லி மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்’ என்றாா்.
பழைய தில்லியில் உள்ள துா்க்மேன் கேட் பகுதியில் ஏராளமான பழைய மற்றும் புராதன கட்டடங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமானவையும் அடங்கும்.