மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நிஜாம்பூா் மாநகராட்சியில் கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த மாநகராட்சி சுகாதார அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘பிவண்டியில் ஓராண்டில் 12,000 முதல் 13,000 பிரசவங்கள் நிகழ்கின்றன. இதில் 3,000 முதல் 4,000 பிரசவங்கள் வீடுகளில் பாா்க்கப்படுகின்றன. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் சிசுக்களுக்கும் போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. குடிசைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளில் பிரசவம் பாா்ப்பதால் கா்ப்பிணிகள், சிசுக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையா் கட்டாயமாக்கியுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.