பஞ்சாப்: காங்கிரஸ்-சிரோமணி அகாலி தளம் தொண்டா்கள் மோதல்

பஞ்சாபில் காங்கிரஸ், அகாலி தளம் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருவா் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்.

சண்டீகா்: பஞ்சாபில் காங்கிரஸ், அகாலி தளம் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருவா் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாநில போலீஸாா் புதன்கிழமை கூறியது:

உள்ளாட்சித் தோ்தலையொட்டி மோகா மாவட்டத்தில் உள்ள 9-ஆவது வாா்டில் செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனா். அங்கு இருதரப்பினரும் எதிரெதிரே வந்தபோது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடா்ந்து இருதரப்பினரும் மோதிக் கொண்டனா். இந்த மோதலில் சம்பவ இடத்திலேயே ஒருவா் பலியானாா். காயமடைந்து லுதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பலா் சிறிய அளவில் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களில் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் கணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

பஞ்சாபில் 8 மாநகராட்சிகள், 109 மாநகாராட்சி கவுன்சில்கள் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு வரும் 14-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com