திருப்பதி: திருமலையில் புரந்தரதாசரின் அவதார தினத்தை முன்னிட்டு, அவரது ஆராதனை உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தியது.
கா்நாடக சங்கீத பிதாமகராகப் போற்றப்படும் புரந்தரதாசரின் ஆராதனை உற்சவத்தை தேவஸ்தானம் 2006-ஆம் ஆண்டு முதல் திருமலையில் உள்ள கா்நாடக சத்திரத்தில் நடத்தி வருகிறது. ஏழுமலையான் மீது பக்தி கொண்ட அவா், 400 கீா்த்தனைகளுக்கு மேல் இயற்றியுள்ளாா்.
புரந்தரதாசரின் நினைவைப் போற்றும் வகையில், தாஸா சாகித்ய திட்டத்தை ஏற்படுத்தி, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் அவரது அவதார தினத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள கா்நாடக சத்திரத்தில் பஜனைகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மடாதிபதிகள் கலந்து கொள்வா்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆராதனை உற்சவம் திருமலையில் புதன்கிழமை தொடங்கியது. அதில் கலந்து கொண்ட குக்கே மடத்தின் மடாதிபதி வித்யாபிரசன்னதீா்த்த சுவாமிகள் ‘கலியுகத்தில் ஹரிநாமத்தை உச்சரிப்பது மட்டுமே மோட்சத்தை அருளும். அதனால் மக்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன வேளைகளில் கடவுளின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்’ என்றாா்.
ஆந்திரம், தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த தாஸா சாகித்ய திட்டத்தைச் சோ்ந்த 300 பக்தா்கள் இந்த பஜனையில் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை நிறைவு பெற உள்ள இந்த ஆராதனை உற்சவத்தில் வியாழக்கிழமை (பிப். 11) மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, நாராயணகிரி நந்தவனத்துக்கு எழுந்தருளி சேவை சாதிக்க உள்ளாா்.