மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 3,670 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 3,670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 3,670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,670 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,56,575ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 36 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 51,451 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,422 பேர் குணமடைந்தனர். 
இதுவரை மொத்தம் 19,72,475 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 55,635 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தம் 1,52,19,416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
தற்போது 31,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,68,087 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். மும்பையை பொறுத்தவரை இன்று 599 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com