மாநிலங்களவை கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவை மார்ச் 8ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்க உரையாற்றினார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் மத்திய ஆய்வறிக்கை மீதான முதற்கட்ட அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாநிலங்களவை மார்ச் 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார். மார்ச் 8ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.