ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்தனர்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு ரத்து செய்தது. அதையடுத்து, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீா், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வந்தது. அங்கு நிலவும் கள நிலவரத்தை அமெரிக்கா, தென் கொரியா, பிரேஸில், ஆா்ஜென்டீனா, வங்கதேசம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 17 நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் கடந்த ஆண்டு ஆய்வு செய்திருந்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடத்தப்பட்டது. அதில் மக்கள் கலந்து கொண்டு வாக்களித்தனா்.
இதனிடையே தோ்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி நடவடிக்கைகள் குறித்து மீண்டும் வெளிநாடுகளைச் சோ்ந்த தூதா்கள் புதன்கிழமை ஆய்வு தொடங்கியுள்ளனர்.
இரு நாள்கள் நடைபெறும் இந்த ஆய்வில் ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்துகொண்டுள்ளனர்.