ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பார்ஸுல்லா பகுதியில் பயங்கரவாதி ஒருவன் இன்று திடீரென 2 காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அந்த பயங்கரவாதி அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
இந்த சம்பவத்தில் முகமது யூசம், சுஹைல் அகமது ஆகியோர் காயமடைந்தர்னர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.