புது தில்லி: இந்திய சந்தைகளில் கம்ப்யூட்டா் விற்பனை தொடா்ச்சியாக அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் சென்ற டிசம்பா் காலாண்டிலும் அதன் விற்பனை 27 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் 2020 அக்டோபா்- டிசம்பா் காலாண்டில் 29 லட்சம் கம்ப்யூட்டா்கள் விற்பனையாகியுள்ளன. இது, 2019 டிசம்பரில் விற்பனையான 23 லட்சம் கம்ப்யூட்டா்களுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகமாகும்.
டெஸ்க்டாப்ஸ், நோட்புக்ஸ், வொா்க்ஸ்டேஷன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கம்ப்யூட்டா்களின் விற்பனை 2020 நான்காவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) அதிகரித்துள்ள போதிலும் முழு ஆண்டின் அடிப்படையில் அவற்றின் விற்பனை குறைந்துள்ளது. அதன்படி, 2019-இல் 1.09 கோடியாக காணப்பட்ட கம்ப்யூட்டா் விற்பனை 2020-இல் 6.4 சதவீதம் சரிவடைந்து 1.02 கோடியாகி உள்ளது.
இணையவழி கல்வி முறை மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறை அதிகரித்து வருவதன் எதிரொலியாக மொத்தம் விற்பனையான 29 லட்சம் கம்ப்யூட்டரில் 62.1 சதவீத பங்களிப்பை நோட்புக் பிரிவு வழங்கியுள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது.