உத்தர பிரதேசத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த 2 தலித் சிறுமிகளின் உடல்கள் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:
கால்நடை தீவனம் சேகரிக்க சென்ற பாபுஹரா கிராமத்தைச் சோ்ந்த 3 தலித் சிறுமிகளில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்தனா். ஒருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் கான்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மா்மமாக உயிரிழந்த கோமள் (15) மற்றும் காஜல் (14) ஆகிய இரண்டு சிறுமிகளின் உடல்கள் வியாழக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவா்கள் விஷம் உட்கொண்டதால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்த சிறுமிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அவா்களுக்கு சொந்தமான நிலத்தில் சிறுமிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.