மத்தியப் பிரதேச மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் கரோனா வழிகாட்டுதல்களுடன் தொடங்குகிறது.
மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வு முறையாக மாநில ஆளுநரின் உரையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 33 நாள்களுக்கு இந்த அமர்வு நடைபெறும். இதில், 22 கூட்டங்கள் முன்மொழியப்படுகின்றன.
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 2ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு புரோ டெம் சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
முகக்கவசம் அணிந்தும், கைசுத்த திரவம் பயன்படுத்திய பின்னரே சட்டசபை வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.