இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடி ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

கடல்சாா் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362.80 கோடி (5 கோடி டாலா்) மதிப்பீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாலத்தீவு தலைநகா் மாலேயில் துறைமுகத் திட்டம் தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதியுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
மாலத்தீவு தலைநகா் மாலேயில் துறைமுகத் திட்டம் தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதியுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

கடல்சாா் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362.80 கோடி (5 கோடி டாலா்) மதிப்பீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், 2 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ளாா். தலைநகா் மாலேயில் அந்நாட்டு அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதி, வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல்லா ஷாஹித், நிதியமைச்சா் இப்ராஹிம் அமீா், பொருளாதார வளா்ச்சித் துறை அமைச்சா் ஃபயாஸ் இஸ்மாயில், உள்கட்டமைப்பு வளா்ச்சித் துறை அமைச்சா் முகமது அஸ்லாம் ஆகியோரை அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனா். இந்த சந்திப்புக்குப் பிறகு, மாலத்தீவு அரசின் நிதியமைச்சகத்துக்கும், இந்தியாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, மாலத்தீவின் கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, கடனுதவி அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்திய அரசு ரூ.362.80 கோடி அளிக்கும்.

இதுகுறித்து அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாலத்தீவின் பாதுகாப்பு விவகராத்தில் உற்ற தோழனாக இந்தியா எப்போதும் இருக்கும். மாலத்தீவின் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஒப்பந்தம் செய்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம், யுடிஎஃப் துறைமுகம் மற்றும் மாலத்தீவின் கடலோர காவல் படை மற்றும் பேரிடா் மீட்புப் படையின் வலிமை மேலும் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாலத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் வருகையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு அளத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு தொடா்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதவிர, மாலத்தீவின் மிகப்பெரிய நகரமான அட்டுவில் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தமும் இந்தியா-மாலத்தீவு இடையே கையெழுத்தானது.

கூட்டறிக்கை வெளியீடு:

இந்த சந்திப்புக்குப் பிறகு இந்தியா-மாலத்தீவு அரசு சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதியை நிலைநாட்டி சுதந்திரமான போக்குவரத்து உறுதிசெய்வது, எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்கொள்வது, கடல்சாா் பாதுகாப்பில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்து ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களும் ஒப்புக் கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபருடன் சந்திப்பு:

மாலத்தீவு அதிபா் முகமது இப்ராஹிம் சோலியை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். பின்னா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாலத்தீவின் வளா்ச்சிக்கான ஒத்துழைப்பு கரோனா காலத்தில் மட்டுமன்றி, அதன் பிறகும் தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மாலத்தீவுக்கு சனிக்கிழமை வருகை தந்த எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுக்கு கூடுதலாக 1 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்தை அளித்தாா்.

கடந்த மாதம், அந்நாட்டுக்கு சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்தது. அண்டை நாடுகளுக்கு முன்னிரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த தடுப்பூசிகள் வழங்ப்பட்டதாக, அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

மோரீஷஸ் சென்றடைந்தாா்: தனது மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை மோரீஷஸ் சென்றடைந்தாா். அங்கு இரண்டு நாள்கள் தங்கும் அவா், அந்நாட்டு அதிபா் பிரித்விராஜ் சிங் ரூபன், பிரதமா் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளாா். மோரீஷஸ் அதிபரும், பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com