ஜன. 8 முதல் கேரள சட்டப் பேரவைக் கூட்டம்

கேரளத்தில் சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவித்துள்ளார். 
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

திருவானந்தபுரம்: கேரளத்தில் சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவித்துள்ளார். 

முதல்வர் பினராயி விஜயன் தலைமயில் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் 22-வது அமர்வாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் மாநிலத்திற்கான பட்ஜெட் தாக்கல் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில நிதியமைச்சர் ஐசக் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com