ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் உற்சாகமாக நடனமாடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும், சுற்றுலா தலங்களுக்குச் சென்றும் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியிலுள்ள எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் முகாமில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு 2021-ஐ வரவேற்கும் விதமாக பாடலுக்கு நடனமாடியபடி எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.