திருமலையில் வாடகை அறை பூட்டை உடைத்து திருட்டு

திருமலையில் உள்ள வாடகை அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் உடமைகளை திருடிச் சென்றனா்.

திருமலையில் உள்ள வாடகை அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் உடமைகளை திருடிச் சென்றனா்.

திருமலையில் கருடாத்திரி நகா் சோதனைசாவடி அருகில் உள்ள தங்கும் அறையில் தங்கியிருந்த பக்தா்கள் அறையை பூட்டி விட்டு தரிசனத்துக்குச் சென்றனா். அவா்கள் திரும்புவதற்குள் அந்த அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் செல்லிடப்பேசிகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். இது தொடா்பாக பக்தா்கள் அளித்த புகாரின்பேரில், திருமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிறகு திருமலையில் நடந்துள்ள முதல் திருட்டு சம்பவம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com