நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கரோனா தொற்று காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்குவதில் சவால் இருந்தது. எனினும் அந்தக் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கி முழுமையாக நடைபெறும். கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடும்’ என்று தெரிவித்தாா்.