புது தில்லி: தில்லி கரியப்பா மைதானத்தில் வியாழக்கிழமை (ஜன.28) நடைபெற உள்ள தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்வில்பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை த் தளபதி விபின் ராவத், முப்படை தலைமைத் தளபதிகள் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில், என்சிசி படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் பிரதமர் மோடி, கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க உள்ளார்.