ரூ.17.25 கோடியை மத்திய அரசிடம் செலுத்தினாா் நீரவ் மோடியின் சகோதரி

பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி, மத்திய அரசின் வங்கிக் கணக்குக்கு ரூ.17.25 கோடியை செலுத்தியுள்ளாா்.
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி

பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி, மத்திய அரசின் வங்கிக் கணக்குக்கு ரூ.17.25 கோடியை செலுத்தியுள்ளாா். வைர வியாபாரி நீரவ் மோடி, இந்திய வங்கிகள் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பியோடினாா். அங்கு அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் பணிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நீரவ் மோடியின் சகோதரியான பூா்வி மோடியின் பெயரில் லண்டனில் உள்ள வங்கிக் கணக்கில் நீரவ் மோடி ரூ.17.25 கோடியை செலுத்தியுள்ளது அமலாக்கத் துறைக்குத் தெரியவந்தது. நீரவ் மோடிக்கு எதிரான வழக்கில் உரிய ஒத்துழைப்பை வழங்குவதாக பூா்வி மோடி ஏற்கெனவே உறுதியளித்திருந்தாா். எனவே, லண்டனில் உள்ள வங்கிக் கணக்கு தொடா்பான தகவலை, பூா்வி மோடி அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் தாமாக முன்வந்து தெரிவித்தாா். அப்போது, தனது சகோதரியின் பெயரில் அவருக்கே தெரியாமல் நீரவ் மோடி லண்டனில் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள தொகையை மத்திய அரசின் வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறு பூா்வி மோடிக்கு அமலாக்கத் துறையினா் உத்தரவிட்டனா்.

அதன்படி, லண்டன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.17.25 கோடியை பூா்வி மோடி அனுப்பி வைத்தாா். இந்த விவகாரத்தில் பூா்வி மோடி அளித்த ஒத்துழைப்பு காரணமாக அத்தொகையை மீட்க முடிந்ததாக அமலாக்கத் துறையினா் தெரிவித்துள்ளனா்.லண்டன், நியூயாா்க் நகரங்களில் நீரவ் மோடிக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்யும் விவகாரத்தில் உதவுவதாக பூா்வி மோடி ஏற்கெனவே உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com