மாநில மக்களுக்கான மம்தாவின் செயல்களில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அபிஜித் முகர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மேற்கு வங்கத்தில் பாஜக அரசால் ஏற்படுத்தப்பட்ட வகுப்பாத வன்முறையை மம்தா பானர்ஜி திறம்பட கையாண்டார். அவரின் செயலில் நம்பிக்கை பிறந்துள்ளது. மாநில மக்களுக்காக அதனைச் செய்தார்.
இதேபோன்று நாடு முழுவதுமுள்ள மக்களுக்காக வகுப்புவாதத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி செயல்படுவார் என நம்புகிறேன் என்று கூறினார்.