கரோனா சிகிச்சையில் 4.54 லட்சம் போ்

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 41,506 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 41,506 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தொடா்பாகத் தெரிவித்திருப்பதாவது:

நம் நாட்டில் இதுவரை 2,99,75,064 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 41,526 போ் குணமடைந்துள்ளாா்கள். குணமடைந்தவா்களின் விகிதம் 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.32 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடா்ந்து 20 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.25 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,54,118 ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.08 கோடியாக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு இதுவரை 4,08,040 போ் உயிரிழந்துவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 895 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தடுப்பூசிகள்:

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 37.60 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு இதுவரை, 38.60 கோடிக்கும் அதிகமான (38,60,51,110) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11,25,140 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் சுமாா் 1.44 கோடி (1,44,03,485) தடுப்பூசிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com