மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவில் ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) என்ற பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தெற்கு கொல்கத்தாவின் ஹரிதேவ்பூா் பகுதியில் ஜேஎம்பி பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 போ் கடந்த சில மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்த சிறப்பு அதிரடி பிரிவு காவல்துறையினா் சந்தேகத்துக்குரிய 3 நபா்களையும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றாா் அவா்.