உ.பி.யில் புலி தாக்கி இருவர் பலி : மக்கள் அச்சம்

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி அருகே உள்ள சாலையில்  மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புலி ஒன்று குறுக்கே வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட ஒருவர் அருகில் உள்ள மரத்தில் ஏறி, சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். மற்ற இருவரும் புலியின் தாக்குதலில் பலியாகினர். 

தவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கிரிட் குமார் ரத்தோட் தலைமையிலான காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஏன் வனப்பகுதிக்குள் வந்தனர் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

மேலும் இந்த பகுதியில் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் தாக்குதல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராத வண்ணம், உரிய பாதுகாப்பு அளிக்குமாறு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com